வளரும் 'மிருகம்'
தெலுங்கு நடிகர் ரவிராஜின் மகனும், நடிகருமான ஆதி முதன்முதலாக தமிழில் 'மிருகம்' என்ற படத்தில் நாயகனாக நடிக்கவிருக்கிறார். நாயகியாக பத்மப்பிரியா நடிக்கிறார். திருவாரூரின் ஒரு வறண்ட பகுதியில் மனம் வறண்டு வாழ்ந்த ஒரு முரட்டு மனிதனின் வாழ்க்கையை யதார்த்தமாய்ப் பதிவு செய்யும் கதைதான் 'மிருகம்'.

கார்த்திக் ஜெய் மூவிஸ் படநிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் மற்றும் இயக்கத்தை 'உயிர்' சாமி கவனிக்கிறார். நா. முத்துக்குமாரின் பாடல்களுக்கு சபேஷ்-முரளி இசையமைக்க, தோட்டாதரணியின் கைவண்ணத்தில் 'மிருகம்' வளர்ந்து வருகிறது.

தொகுப்பு: கேடிஸ்ரீ

© TamilOnline.com