நகைச்சுவை துணுக்குகள்
நோயாளி: பிரிஸ்கிரிப்ஷன்ல இருக்கற எல்லா மருந்தையும் வாங்கிட்டேன், மேல எழுதியிருக்கறது மட்டும் என்னன்னு புரியல்லை.

டாக்டர்: ஓ, அதுவா! அது பிள்ளையார் சுழி.

*****


நோயாளி: டாக்டர், எனகென்னவோ எப்பவும் பயமாயிருக்கு, தற்கொலை செஞ்சுக்கலாமான்னு தோணுது.

டாக்டர்: அதெல்லாம் ஒண்ணும் வேணாம். எங்கிட்ட வந்துட்டீங்க இல்ல, நான் பாத்துக்கறேன்!

*****


நோயாளி: விட்டு விட்டு இருமல் வருதுங்கறதுக்காக நீங்க கொடுத்த மருந்தைச் சாப்பிட்டேன்.

டாக்டர்: இப்போ சரியாப் போயிருக்குமே!

நோயாளி: இப்போ தொடர்ச்சியா இருமறேன்.

டி.எஸ்.பத்மநாபன்

*****


நோயாளி: டாக்டர் மூச்சுவிட்டால் மாரை வலிக்கிறது.

டாக்டர்: ஒரே மாத்திரையில் இரண்டையும் நிறுத்தி விடுகிறேன். கவலைப்படாதீங்க.

அட்லாண்டா ராஜன்

© TamilOnline.com