ஓய்வுக்கு மறுபடியும் புறப்பட்டன யானைகள்!
தனியார் மற்றும் கோயில் யானைகளுக்கான புத்துணர்வு முகாம் முதுமலை வனச் சரணாலயத்தில் மீண்டும் நவம்பரில் தொடங்கியது. இவ்வருடம் எழுபதுக்கும் மேற்பட்ட யானைகள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து முதுமலைக் காட்டிற்குச் சென்றுள்ளன.

கடந்த ஆண்டு வனத்துறை ஒத்துழைப் போடு நடைபெற்ற முகாமை இந்த ஆண்டு இந்து அறநிலையத்துறை முன்னின்று நடத்துவது குறிப்பிடத்தக்கது.

முகாம் நடைபெறும் பகுதியைச் சுற்றிலும் காட்டு யானைகளால் எவ்விதத் தொந்தரவும் ஏற்படாமலிருக்க மின்வேலியும், அதைச்சுற்றி சக்தி வாய்ந்த மின்விளக்குகளும் அமைக்கப் பட்டுள்ளன. அதுபோல் இப்பகுதியைச் சுற்றிலும் வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். ஓய்வும், புத்துணர்வும் தரும் இந்த முகாம் ஒருமாத காலம் நடைபெறும்.

தொகுப்பு: கேடிஸ்ரீ

© TamilOnline.com