கலைஞரின் கதை, வசனத்தில் 'மண்ணின் மைந்தன்'
'கண்ணம்மா' படத்தைத் தொடர்ந்து 'மண்ணின் மைந்தன்' என்கிற திரைப்படத்திற்காக திரைக்கதை, வசனம் எழுதுகிறார் தி.மு.க. தலைவர் கருணாநிதி. படத்தின் தொடக்கவிழா ஏ.வி.எம். ஸ்டூடியோவில் நடைபெற்றது. தொடக்க விழாவில் கலந்து கொண்டு பேசுகையில் ''கலைஞர்களுக்கு இடையே அரசியல் வேறுபாடு இருக்கக்கூடாது'' என்று கூறினார் கருணாநிதி.

மேலும் ''சில வாரங்களுக்கு முன்பு நடைபெற்ற 'கண்ணம்மா' படத்தொடக்கவிழாவுக்கு வந்தபோது திரைப்படத்துறையில் ஒரு தேக்கம் இருந்தது. தற்போது திரையுலகுக்குத் தமிழக அரசு பல்வேறு சலுகைகளை அளித்துள்ளது. இது பாராட்டுக்குரியது'' என்று தமிழக அரசையும் பாராட்டினார்.

மண்ணின் மைந்தன் படத்தை ராமநாராயணன் இயக்குகிறார். இதில் சத்யராஜூம் அவரது மகன் சிபியும் இணைந்து நடிக்கின்றனர். படத்திற்கான பாடல்களை வாலி, வைரமுத்து ஆகியோர் எழுதுகின்றனர்.

தொகுப்பு: கேடிஸ்ரீ

© TamilOnline.com