ஒவ்வொரு பொருளுக்கும் தரத்திலும் அளவிலும் வேறுபாடு உண்டு
ஏராளமாகப் புத்தகங்களைப் படிப்பதனாலும் வாதப் போக்கை வளர்த்துக் கொள்வதாலும் இளைஞர்கள் மற்றவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவது இன்று இயல்பாக உள்ளது. ஒருமுறை 22 வயது இளைஞர் ஒருவர் சங்கரரிடம் சென்றார். சங்கரர் சீடர்களுக்கு ஆன்மீகப் பாடம் சொல்லிக் கொண்டிருந்தார். இளைஞர் குறுக்கிட்டு, பரந்த உலகில் உள்ள மனிதர்கள் அனைவரையும் சமமாகக் கருதக்கூடாதா என்று சங்கரரிடம் கேட்டார். சங்கரர் புன்னகைத்து, இந்த இளைஞரின் ரத்தம் சூடாகவும் வேகமாகவும் இருப்பதாகவும், அதனால் அவர் விஷயங்களை வலியப் புகுத்த முயற்சிக்கிறார் என்றும் கூறினார்.

நிரந்தரமானவற்றையும் நிலையற்ற விஷயங்களையும் மனிதனால் பாகுபடுத்திப் பார்ப்பது சாத்தியமில்லை. ஒருவர் தனது மனத்திலும் அணுகுமுறைகளிலும் அத்வைத தத்துவத்தை ஏற்றுக்கொள்ளலாம், ஆனால் நடைமுறையில் உலகில் அனைத்தையும் சமன் செய்வது சாத்தியமில்லை என்றார். இது சரியாகத் தெரியவில்லை என்று அந்த இளைஞன் வலியுறுத்தினான். எல்லா உயிரினங்களையும் ஒரே மாதிரியாக நடத்துவதே சரியானது என்று அவர் கூறினார்.

இவனை இப்படியே விட்டால், அவர் சில அபத்தமான முடிவுகளை அடைய வாய்ப்புள்ளது என்பதைச் சங்கரர் உணர்ந்தார். சங்கரர் அவருக்கு உடனடியாகப் பாடம் கற்பிக்க முடிவு செய்து, உனக்கு அம்மா இருக்கிறாரா என்று கேட்டார். அந்த இளைஞர், அன்னை இருப்பதாகவும் அவரை மிகவும் மதிப்பதாகவும் பதிலளித்தார். அவருக்குத் திருமணமாகிவிட்டதா என்று கேட்டார். அந்த இளைஞர் தனக்குத் திருமணம் ஆகிவிட்டதாகவும், மனைவி தன்னுடன் ஆசிரமத்திற்கு வந்திருப்பதாகவும் பதிலளித்தார். பின்னர் சங்கரர் அவரிடம் மாமியார் இருக்கிறாரா என்று கேட்டார். மாமியார் மிக ஆரோக்கியமாக இருப்பதாக அந்த இளைஞர் பதிலளித்தார். சங்கரர் உனக்குச் சகோதரிகள் இருக்கிறார்களா என்று கேட்க, அந்த இளைஞர் தனக்கு இரண்டு சகோதரிகள் இருப்பதாகக் கூறினார்.

அவர்கள் எல்லோரும் பெண்கள்தாமா என்று சங்கரர் கேட்டார். வேறெப்படி இருக்க முடியும் என்று அந்த இளைஞர் கேட்டார். அவர்கள் அனைவரையும் சமமாகக் கருதுகிறீரா, அனைவரையும் ஒரே மாதிரியாக நடத்துகிறீரா, குறிப்பாக, உமது மனைவியை நீர் தாயாகவும், சகோதரியை மாமியார் போலவும் நடத்துகிறீரா என்று கேட்டார்.

பன்முகத்தன்மை கொண்ட இந்த உலகில், ஒருவர் தரம் மற்றும் அளவில் வேறுபாடுகள் இருப்பதை அங்கீகரித்தாக வேண்டும். ஒவ்வொரு மின் பல்பும் ஆற்றல் மற்றும் வாட்டேஜில் மாறுபடும். எனவே, விளக்கில் இருந்து வெளிப்படும் ஒளியின் வேறுபாடு, மின்சாரத்தின் காரணமாக ஏற்படுவதில்லை. மின்னோட்டம் எல்லாவற்றிலும் ஒரே மாதிரிதான் இருக்கும்; ஆனால் வித்தியாசம் எழுவது வெவ்வேறு ஒளித்திறன் கொண்ட பல்புகளில் இருந்துதான். கடவுளின் சக்தி மின்சாரம் போன்றது, நம் உடல்கள் பல்புகள் போன்றவை.

நன்றி: சனாதன சாரதி, மார்ச் 2023

பகவான் ஸ்ரீ சத்திய சாயி பாபா

© TamilOnline.com