மா. அரங்கநாதன் இலக்கிய விருது
எழுத்தாளரும், 'முன்றில்' இலக்கிய இதழை நடத்தியவருமான மா. அரங்கநாதன் நினைவாக, ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 16 அன்று தமிழ் அறிஞர்களுக்கு மா. அரங்கநாதன் இலக்கிய விருது வழங்கப்படுகிறது. சென்னை உயர்நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியும், மா. அரங்கநாதனின் மகனுமான ஆர். மகாதேவன், இவ்விருதை வழங்கி வருகிறார். அந்த வகையில் 2023ம் ஆண்டிற்கான விருது பேராசிரியர் க. பஞ்சாங்கம், எழுத்தாளர் சுரேஷ்குமார் இந்திரஜித் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.



© TamilOnline.com