தெரியுமா?: கி.வா.ஜ. சிறுகதைப் போட்டி - 2023
கி.வா.ஜ. சிறுகதைப்‌ போட்டிக்கு சிறுகதைகள்‌ வரவேற்கப்படுகின்றன. கதைகள்‌ கலைமகளில்‌ நான்கு பக்கங்களுக்கு மிகாமல்‌ இருக்க வேண்டும்‌. 900 வார்த்தைகளுக்குள்‌ அமைதல்‌ வேண்டும்‌.

சிறுகதைகளை 2023 மார்ச்‌ 10-ஆம் தேதிக்குள்‌ அனுப்பி வைக்க வேண்டும்‌. தபாலில்தான்‌ அனுப்ப வேண்டும்‌. இணையம்‌ வழியாக அனுப்ப வேண்டாம்‌. கதைகள்‌ டைப்‌ செய்யப்பட்டிருக்க வேண்டும்‌.

கையெழுத்தில்‌ உள்ள சிறுகதைகள்‌ ஏற்றுக்‌ கொள்ளப்படமாட்டா. கதைகளைப்‌ பிரதி எடுத்துக்‌கொண்டு அனுப்பவும்‌. திருப்பி அனுப்புவதற்கு இல்லை. ஆசிரியரின்‌ முடிவே இறுதியானது. நடுவர்களால்‌ தேர்வு செய்யப்படும் சிறந்த மூன்று கதைகளுக்கு‌த் தலா ரூ. 6,000 பரிசு வழங்கப்படும்‌.

கி,வா.ஜ. குடும்பத்தினரால்‌ இப்போட்டி நடத்தப்படுகிறது.

கதைகள்‌ அனுப்ப வேண்டிய முகவரி:
கி.வா.ஜ. சிறுகதைப்‌ போட்டி - 2023
கலைமகள்‌ மாத இதழ்,‌
34/2, வீரபத்திரன்‌ தெரு,
மயிலாப்பூர்‌,
சென்னை - 600004.

செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com