எழுத்தாளர் இமையத்துக்கு 'குவேம்பு' விருது
குவேம்பு ராஷ்டிரிய புராஸ்கர் தேசிய விருது 2022க்கு எழுத்தாளர் இமையம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த விருதைப் பெரும் முதல் தமிழ் எழுத்தாளர் இவர். இந்த விருது வெள்ளிப் பதக்கமும் ஐந்து லட்சம் ரூபாய் பரிசும் கொண்டது.

நவீன கன்னட இலக்கியத்தின் சிறந்த ஆளுமைகளுள் ஒருவர் 'குவேம்பு' என்னும் கே.வி. புட்டப்பா. மைசூர் பல்கலை முன்னாள் துணைவேந்தர். ஞானபீடம், பத்மபூஷண், பத்மவிபூஷண் விருதுகளைப் பெற்றவர். குவேம்புவின் பெயரில் ஷிமோகாவில் பல்கலைக்கழகம் உள்ளது. இவரது நினைவாக இந்த விருது வழங்கப்படுகிறது.

இமையத்துக்குத் தென்றலின் வாழ்த்துகள்.

© TamilOnline.com