இண்டியாஸ்போரா: 10வது ஆண்டு விழா
அமெரிக்க இந்திய சமுதாயத்தின் பல்வேறு துறைகளிலும் தலைமையிடம் வகிப்பவர்களை ஒரு குடைக்கீழ் கொண்டுவரும் இண்டியாஸ்போரா தனது 10வது ஆண்டுவிழாவை கலிஃபோர்னியாவின் சான் ஹோஸேவில் அக்டோபர் 14, 15, 16 நாட்களில் கொண்டாடியது. இதில் இருநூறுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். தொழில்முனைதல், சமூகத் தாக்கம், அறக்கொடை, சுற்றுச்சூழல், அரசியல் பங்கேற்பு, நலவாழ்வு, கலைகள், கல்வி எனப் பல்வேறு தலைப்புகள் இதில் விவாதிக்கப்பட்டன.

இண்டியாஸ்போரா அறக்கொடை உச்சி மாநாடு 2022 அக்டோபர் 22ம் நாளன்று இண்டியாஸ்போரா மற்றும் GIVE அமைப்புகள் இணைந்து Indiaspora-Give Philanthropy Summit 2022 என்னும் உச்சி மாநாட்டை நியூ யார்க்கில் நடத்தினர். இந்த நிகழ்வில் முன்னணி கொடையாளர்கள், அறக்கட்டளைகள் மற்றும் லாப நோக்கற்ற அமைப்புகள் பங்கேற்றன. விழாவில், தற்போதைய அறப்பணிகளுக்கான சவால்கள், வாய்ப்புகள் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டன.




இண்டியாஸ்போராவைத் தொடங்கிய திரு M.R. ரங்கஸ்வாமி அவர்களுடனான முந்தைய தென்றல் நேர்காணல்கள் வாசிக்க:

நேர்காணல் #1
நேர்காணல் #2



செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com