தமிழன் விருது
புதிய தலைமுறை தொலைக்காட்சி நிறுவனம், ஆண்டுதோறும் சிறந்த சாதனையாளர்களுக்கு விருதளித்துச் சிறப்பிக்கிறது. அந்த வகையில் இலக்கியத்துக்கான 'தமிழன் விருது' எழுத்தாளர் பா. திருச்செந்தாழைக்கு வழங்கப்படுகிறது.

மதுரையில் வணிகம் செய்துவரும் திருச்செந்தாழை, தனக்கென்று ஓர் தனித்துவ மொழியில் இயங்கி வருபவர். வெயில் நண்பன் பிரார்த்தனை ஒரு பிரதேசம், விலாசம் என்னும் இரண்டு சிறுகதைத் தொகுப்புகள் வெளியாகியுள்ளன. தொடர்ந்து நிறையச் சிறுகதைகளை எழுதி வருகிறார்.



© TamilOnline.com