சமரன்
சரத்குமார் நாயகனாக நடிக்கும் படம் இது. அஷ்வதி கதாநாயகி. நந்தா, சுஹாசினி, சிங்கம் புலி, சித்திக், கஞ்சா கருப்பு உள்ளிட்டோர் உடன் நடிக்கின்றனர். இசை: வேத்சங்கர் சுகவனம். கதை எழுதி இயக்குகிறார், திருமலை பாலுச்சாமி. இப்படம் பற்றி தயாரிப்பாளர் ரோஷ்குமார், "இது குடும்பங்கள் கொண்டாடும் படமாகவும், இந்தக் காலகட்டத்திற்கு தேவையான கருத்துகளை உணர்த்தும் விதமாகவும் அமைந்துள்ளது. இந்த மண் சார்ந்த கதாபாத்திரத்திற்குச் சரியான நபராக எனக்கு தோன்றியது சரத்குமார் தான். இயக்குநரும் ஒப்புக்கொண்டார். நடிகர் சரத்குமார் இந்த கதையைக் கேட்டவுடன், இது தனக்கான கதையென்று உணர்ந்து உடனடியாக நடிக்க ஒப்புக்கொண்டார்" என்கிறார்.

அரவிந்த்

© TamilOnline.com