புகைப்படம்
வித்தியாசமான கதை அம்சங்களுடன் உருவாகிறது புகைப்படம். மானவ் ஆனந்த் நாயகனாக நடிக்க, கிருபா சேகர் நாயகியாக நடிக்கிறார். உடன் ஷிவானி, ராகுல் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இசை: சத்யராஜ். கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்குகிறார், சுரேஷ் முருகன். படம் பற்றி இயக்குநர், "சிறு வயதிலேயே தாய், தந்தையை இழந்த கதாநாயகனுக்கு அவர்களுடன் பேசும் ஆசை ஏற்படுகிறது. ஆவிகளுடன் பேசுவதைப் பற்றி ஆராய்ச்சி செய்கிறார். இந்நிலையில் கதாநாயகியின் தாய், தந்தை திடீரென்று விபத்தில் மரணம் அடைகின்றனர். அவர்களுடைய ஆவியுடன் பேசும்போது பல திடுக்கிடும் உண்மைகள் கிடைக்கின்றன. இதனால் நாயகனும், நாயகியும் பேராபத்தில் சிக்குகின்றனர். என்ன ஆனது என்பதுதான் படத்தின் கதை" என்கிறார்.

அரவிந்த்

© TamilOnline.com