ஐஸ்வர்யா முருகன்
ஆணவக் கொலையை மையமாகக் கொண்ட படம் இது. 'கருப்பன்' படத்தை இயக்கிய ஆர். பன்னீர் செல்வம் இப்படத்தை இயக்குகிறார். கதாநாயகனாக அருண் பன்னீர்செல்வம் அறிமுகமாகிறார். கேரளாவைச் சேர்ந்த வித்யாபிள்ளை கதாநாயகியாக அறிமுகமாகிறார். உடன் தெய்வேந்திரன், ஹர்ஷ் லால்வானி, சாய் சங்கீத், குண்டு கார்த்திக், தீனா, ராஜா, சங்கீதா, நாகேந்திரன் உள்ளிட்ட பல புதுமுகங்கள் நடிக்கின்றனர். இசை: கணேஷ் ராகவேந்திரா. படம் பற்றி இயக்குநர், "காதலையும், வலியையும், பிரிவையும் பல படங்களில் சொல்லி விட்டார்கள். ஆனால் ஒரு காதல், காதலர்களின் குடும்பங்களை எப்படிச் சிதைத்துத் துயரங்களை உண்டாக்கியது என்பது உள்பட பல நிஜங்களைச் சொல்கிற படம் இது" என்கிறார்.

அரவிந்த்

© TamilOnline.com