ஆர். சூடாமணியின் கதைகள் படமாகிறது
மோகமுள், பாரதி, ராமானுஜன் போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் ஞான.ராஜசேகரன், நீண்ட இடைவெளிக்குப் பின் எழுத்தாளர் ஆர். சூடாமணியின் தேர்ந்தெடுத்த கதைகளை தொகுப்புப் படமாக்கியுள்ளார். இப்படத்தில் சுஜிதா, ஷ்ரேயா அன்சன், ஸ்ரீரஞ்சனி, ஷைலஜா செட்லூர், சிட்டிசன் சிவக்குமார், மணிபாரதி உள்ளிட்டோர் நடித்துள்ளனர், "மனித மனங்களைப் பற்றியும், பெண்களைப் பற்றியும் 40 வருடங்களுக்கு முன்பே சூடாமணி எழுதியுள்ளார். பெண்களை மையமாக வைத்து ஆண், பெண் உறவுபற்றி அவர் எழுதிய ஐந்து சிறுகதைகளைப் படமாக்கி உள்ளேன். அவை இன்றைக்கும் பொருத்தமாக இருக்கின்றன. கொரோனா முதல் அலைக்குப் பிறகு இந்தப் படத்தை எடுத்து முடித்தேன். அப்போது இந்தப் படத்தில் நடிக்கத் தயாராக இருந்தவர்களைத்தான் படத்தில் நடிக்க வைத்துள்ளேன். ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார். இப்போது சீரியஸான ஒரு படத்திற்கு இசையமைத்துள்ளார். அவருடைய மற்றொரு பக்கம் இதில் வெளிப்படும்" என்கிறார் இயக்குநர்.

அரவிந்த்

© TamilOnline.com