பாலசந்தர் இயக்கும் 'பொய்'
தற்போது சின்னத்திரை தயாரிப்புகளில் அதிக கவனம் செலுத்தி வரும் கே. பாலசந்தர் நீண்ட இடைவேளைக்குப் பிறகு திரைப்படம் ஒன்றை இயக்கவிருக்கிறார்.

மணிரத்னத்தின் உதவியாளர் ப்ரியா இயக்கத்தில் 'கண்ட நாள் முதல்' என்ற படத்தைத் தயாரித்துக் கொண்டிருக்கும் பிரகாஷ்ராஜ், தொடர்ந்து டூயட் மூவிஸ் சார்பில் தயாரிக்கவிருக்கும் படத்தை பாலசந்தர் இயக்கவிருக்கிறார்.

'பொய்' என்ற பெயரில் உருவாகவிருக்கும் இப்படத்தில் நாயகன், நாயகி எல்லோருமே புதுமுகங்கள். படப்பிடிப்பு முழுவதும் இலங்கையில் நடக்கவிருக்கிறது.

கே.பாலசந்தரின் 'டூயட்'டில் அறிமுகமான பிரகாஷ்ராஜ், அந்தப்புரம், தயா, நாம், அழகிய தீயே ஆகிய படங்களைத் தயாரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொகுப்பு: கேடிஸ்ரீ

© TamilOnline.com