அனுக்கிரகன்
முரளி ராதாகிருஷ்ணன், அஜய் கிருஷ்ணா, ஸ்ருதி ராமகிருஷ்ணா, தீபா உள்ளிட்டோர் நடிக்கும் படம் இது. 'கண்ணம்மா... கண்ணம்மா' பாடல் மூலம் புகழ்பெற்ற மாஸ்டர் ராகவன் இப்படத்தில் முக்கிய வேடமேற்றுள்ளார். இசை: ரெஹான். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் சுந்தர் கிரிஷ். இவர், "இறைவனின் அருளும் ஆசீர்வாதமும் பெற்ற ஒரு மகனின் கதை இது. பல குடும்பங்களில் அப்பாவுக்கும் மகனுக்கும் நடுவில் இன்னும் சுதந்திரப் போராட்டம் நடந்து கொண்டேதான் இருக்கிறது. தலைமுறை இடைவெளி அதிகமாகி விட்டது. அப்பாவை வில்லனாகப் பார்க்கிறார்கள். இல்லாவிட்டால் காமெடியன் ஆக்கி விடுகிறார்கள். என்னதான் அப்பாவோடு மோதினாலும், பாசம் என்று வந்துவிட்டால் நம் இளைஞர்கள் எப்போதுமே தங்கம்தான். அப்படி ஒரு சூழலைப் படமாக்கியிருக்கிறோம்" என்கிறார்.

அரவிந்த்

© TamilOnline.com