சாகித்ய அகாதமி விருது
2020ம் ஆண்டுக்கான சாகித்ய அகாதமி விருது பெறுகிறார் எழுத்தாளர் 'இமையம்'. இயற்பெயர் அண்ணாமலை. இவரது 'செல்லாத பணம்' நாவல் விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. டாக்டர் எம். திருமலை, டாக்டர் யூ. அலிபாவா, வண்ணதாசன் அடங்கிய நடுவர்குழு 'செல்லாத பணம்' நாவலை விருதுக்குத் தேர்ந்தெடுத்துள்ளது.

ஆசிரியப்பணி புரியும் அண்ணாமலை கோவேறு கழுதைகள், ஆறுமுகம், செடல், எங் கதெ போன்ற நாவல்களைத் தந்தவர். வீடியோ மாரியம்மன், மண்பாரம், கொலைச் சேவல் சாவு சோறு, நறுமணம், நன்மாறன் கோட்டைக் கதை போன்றவை இவரது குறிப்பிடத்தகுந்த சிறுகதைத் தொகுப்புகள். (இமையம் பற்றி மேலும் வாசிக்க)

விருது செப்புப் பட்டயமும் ஒரு லட்ச ரூபாய் பரிசுத் தொகையும் சால்வையும் அடங்கியது. எழுத்தாளர் இமையம் அவர்களுக்குத் தென்றலின் வாழ்த்துக்கள்

© TamilOnline.com