சர்ப்ப கிரகங்கள்
'நாடகக்காவலர்' ஆர்.எஸ். மனோகர் நாடகக்குழுவில் நடித்தவர் துரை பாலசுந்தரம். இவர் இயக்கியுள்ள படம் இது. ராகு-கேது கிரகங்களை மையமாக வைத்து உருவாகி வரும் இப்படத்தில் சிவனாக சமுத்திரகனி நடிக்கிறார். விஷ்ணுவாக விக்னேஷும், துர்க்கையாக கஸ்தூரியும் நடிக்கின்றனர். கதை, வசனம், பாடல்களை கே.பி. அறிவானந்தம் எழுதியிருக்கிறார். படத்தை இயக்கியதுடன் முக்கிய வேடத்திலும் நடித்திருக்கிறார் துரை பாலசுந்தரம். படம்பற்றி இவர், "நாம் அன்றாடம் வணங்கும் நவக்கிரகங்களில் உள்ள ராகு, கேது உருவான விதம், மனித வாழ்வில் அவை ஏற்படுத்தும் தாக்கம் மற்றும் மகிமையை இந்தப் படத்தில் சொல்லியிருக்கிறோம். படம் அதிகப் பொருட்செலவில் உருவாகியிருக்கிறது. நிறைய கிராபிக்ஸ் காட்சிகள் உள்ளன" என்கிறார். நீண்ட நாளைக்குப் பிறகு தமிழில் ஒரு பக்திப் படம்.

அரவிந்த்

© TamilOnline.com