தூங்கா கண்கள்
70 வருடங்களுக்கு முன் திருவாங்கூர் சமஸ்தானத்தில் நடந்த சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவான படம் இது. நடிகர் ஜார்ஜ் மரியானின் மகன் பிரிட்டோ கதாநாயகனாக அறிமுகமாகிறார். அப்ஷரா, ரேஷ்மா கதாநாயகிகளாக அறிமுகமாகிறார்கள். உடன் 'களவாணி' துரை சுதாகர், நிக்கேஷ், 'ஹலோ' கந்தசாமி, காஞ்சனா ரமேஷ், டாக்டர் பிரபு, இயக்குநர் த.வினு போன்றோர் நடித்திருக்கின்றனர். இசை இளங்கோ கலைவாணன். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் த. வினு. "இதுவரையிலும் எந்தவொரு தமிழ் சினிமாவிலும் சொல்லப்படாத ஒரு விஷயம் இதில் சொல்லப்பட்டிருக்கிறது. சஸ்பென்ஸ், திரில்லர், ஹாரர் கலந்து அதிரடியாக உருவாகியிருக்கிறது" என்கிறார் கோலிவுட் கோவிந்து.

அரவிந்த்

© TamilOnline.com