அலறல்
கிரி நாயகனாகவும், நந்தினி, ஸாகித்யா என்ற புதுமுகங்கள் நாயகிகளாகவும் நடித்திருக்கும் படம். தமிழின் பல படங்களில் வில்லனாக நடித்துப் புகழ்பெற்ற சாய் தீனா இப்படத்தில் முதன் முதலாக இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார். குழந்தை நட்சத்திரங்கள் பேபி தன்யஸ்ரீ, மாஸ்டர் சுடர்நிலவன் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அறிமுக இயக்குநர்கள் ரூபநாதன் - பரூக் இணைந்து இயக்குகின்றனர். இப்படம் பற்றி அவர்கள், "உண்மைச் சம்பவங்களின் தாக்கத்தில் பெண்ணியம், குழந்தை உளவியலை கருவாகக் கொண்டு திகிலும், அமானுஷ்யமும் நிறைந்த கமர்ஷியல் படமாக உருவாக்கி இருக்கிறோம்" என்கின்றனர். 'அலறல்' கேட்டு அஞ்சாதோர் உண்டோ?

தொகுப்பு: அரவிந்த்

© TamilOnline.com