ஜூன் 2020: வாசகர் கடிதம்
மே மாதத் தென்றல் இதழில் அன்புள்ள சிநேகிதியே பகுதியில் தனிமை வேறு, வெறுமை வேறு என்பதைப் மிக அருமையாக விளக்கியிருந்தார் டாக்டர் சித்ரா வைத்தீஸ்வரன். மதுரை டாக்டர் கோபி நல்லையன், அவரது துணைவியார் ஹேமலதா நேர்காணல் அற்புதம். இந்தக் காலத்திலும் நல்லவர்கள், தன்னலம் கருதாமல் தொண்டாற்றி வருபவர்கள் இருக்கின்றனர் என்பதைத் தெளிவாக்கியுள்ளீர்கள். 'கொரோனா காலத்தில் வந்த குப்புசாமி' யதார்த்தமான வட்டார மொழியில் மிகச் சுவாரசியமாக இருந்தது.

சசிரேகா சம்பத்குமார்,
யூனியன் சிட்டி, கலிஃபோர்னியா

© TamilOnline.com