செப்டம்பர் 2019: வாசகர்கடிதம்
செப்டம்பர் தென்றல் இதழில் 'சிறுவாச்சூர் மதுரகாளி அம்மன்' கோவிலைப் பற்றிய கட்டுரை படித்து மகிழ்ந்தோம். என் தாய் வீட்டினருக்குக் குலதெய்வம் சிறுவாச்சூர் அம்மன்தான். எதை ஆரம்பிப்பதென்றாலும் சிறுவாச்சூர் சென்று வழிபட்ட பின்னர்தான் செய்வார்கள். அக்டோபர் மாதம் என் சகோதரருக்கு அந்தக் கோவிலில் 'பீமரத சாந்தி' நடைபெற இருக்கிறது. தென்றலில் வந்த இந்தக் கட்டுரையை அவருக்கு அனுப்பினேன். அதைப் படித்துவிட்டு மிகவும் மகிழ்ச்சியடைந்தார். செல்லியம்மனைப் பற்றித் தென்றலில் படித்த பின்னர்தான் தெரிந்து கொண்டோம். கட்டுரை ஆசிரியருக்கும், தென்றலுக்கும் நன்றி.

சசிரேகா சம்பத்,
யூனியன் சிட்டி, கலிபோர்னியா

© TamilOnline.com