சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்


புதுமையான கதை கொண்ட படங்களை இயக்குவதில் புகழ் பெற்ற இயக்குநர் வஸந்த் (எ) வஸந்த் எஸ். சாய், எழுத்தாளர்கள் அசோகமித்திரன், ஆதவன் மற்றும் ஜெயமோகன் ஆகியோரின் சிறுகதைகளை அடிப்படையாகக் கொண்டு மேற்கண்ட படத்தை உருவாக்கியிருக்கிறார். படத்தில் பார்வதி, லட்சுமிப்ரியா சந்திரமௌலி, காளிஸ்வரி ஸ்ரீநிவாசன், கருணாகரன், மாரிமுத்து மாஸ்டர் ஹமரேஷ், நேத்ரா எனப் பலர் நடித்துள்ளனர். மும்பை திரைப்பட விழா, கேரள சர்வதேச திரைப்பட விழா, புனே சர்வதேச திரைப்பட விழா ஆகியவற்றில் பாராட்டுகளைப் பெற்றது. பெங்களூர் திரைப்பட விழாவில் ஆசியாவின் சிறந்த திரைப்படமாக தேர்ந்தெடுக்கப்பட்டது. கலிஃபோர்னியாவில் சர்வதேசத் திரைப்பட விழா, நியூயார்க் சர்வதேசத் திரைப்பட விழா, அட்லாண்டா மாகாணத் திரைப்பட விழா ஆகியவற்றிலும் பாராட்டப்பட்டது. பின்னணி இசை இல்லை என்பது இப்படத்தின் கூடுதல் சிறப்பு. விரைவில் வெண் திரையில் காணலாம் சிவரஞ்சனியையும் மற்றப் பெண்களையும்

அரவிந்த்

© TamilOnline.com