நீர்முள்ளி


சமுதாயத்தில் பெண்கள் தமது ஆண் உறவுகளை எப்படிக் கையாள்கிறார்கள், அதனால் என்ன விளைவுகளைச் சந்திக்கிறார்கள் என்பதைச் சொல்கிறது இப்படம். ஜே.கே. ஹிட்லர் கதை, திரைக்கதை, வசனம் எழுதித் தயாரித்து, நாயகனாக நடிக்கிறார். நாயகி சுமா பூஜாரி. உடன் வாகை சந்திரசேகர், பொன்னம்பலம், ரேகா, நளினி, இமான் அண்ணாச்சி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். படத்தைப்பற்றி இயக்குநர், "பெண்களின் எண்ண ஓட்டம் மாறுபடுவதால் ஏற்படும் சீர்கேடுகள் பற்றிய கதை இது. பெண்களுக்கு ஒரு விழிப்புணர்வை இந்தப் படம் கொடுக்கும்" என்கிறார். இசை: நிர்மல்.

தொகுப்பு: அரவிந்த்

© TamilOnline.com