BATM: செயற்கை நுண்ணறிவுக் கருத்தரங்கம்
2018 ஜூலை 14-15 நாட்களில் வளைகுடாப்பகுதி தமிழ்மன்றம் செயற்கையறிவு குறித்த கருத்தரங்கம் ஏற்பாடு செய்திருந்தது. மருத்துவத்தில் நோயறிதல், பங்கு வணிகம், ரோபோ கட்டுப்பாடு, சட்டம், அறிவியல் கண்டுபிடிப்பு, வீடியோ விளையாட்டுக்கள், பொம்மைகள் மற்றும் வலை தேடுபொறிகள் உட்படப் பெரும்பாலான துறைகளில் வெற்றிகரமாகப் பயன்படுத்தப்படுகிறது. தற்போது செயற்கை நுண்ணறிவுத் திறன் (AI) வெகுவேகமாக வளர்ந்துவரும் தொழில்நுட்பத் துறை என்பதால், பல்வேறு பெரிய நிறுவனங்களும் இந்தத் துறைக்குள் தடம்பதிக்க ஆரம்பித்துள்ளன.

திரு. ஜோதி பெரியசாமி, செயற்கை அறிவாற்றலின் தேவை மற்றும் பயன்பாடுகள் குறித்து மனங்கவரும் வகையில் விளக்கவுரை ஆற்றினார். உயர்தொழில்நுட்பத் துறையாக இருந்தாலும், மாணவர்களும் புரிந்துகொள்ளும் வகையில் அவர் எளிமையாக உரையாற்றினார். மாணவர்கள் அனைவருமே முழு ஈடுபாட்டுடன் காணப்பட்டனர். அவர்களிடம் எண்ணற்ற கேள்விகளும், ஆர்வமும் மேலோங்கி இருந்தன.

கருத்தரங்கில் பங்கேற்ற அனைவரும் வளைகுடாப் பகுதி தமிழ் மன்றம் இதுபோன்ற நிகழ்வுகளைத் தொடர்ந்து நடத்தவேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.

மேலும் தகவலுக்கு: மின்னஞ்சல் - secretary@sfbatm.org
ரமேஷ் குப்புசாமி,
செயலர், BATM.

© TamilOnline.com