பாலசந்தர் இயக்கத்தில் 'பொய்'!
இயக்குநர் சிகரம் கே. பாலசந்தருக்கு வயது 75. சமீபத்தில் இயக்குனருக்குப் பாராட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விழாவிற்கு கமல், ரஜினி என்று பலர் வந்து இயக்குனரைச் சிறப்பித்தனர். இதற்கிடையில் சிறிய இடைவெளிக்குப் பிறகு பாலசந்தர் தமிழ்த் திரைப்படம் ஒன்றை இயக்கவிருக்கிறார். படத்திற்கான பூஜை சமீபத்தில் நடைபெற்றது.

'பொய்' என்கிற பெயரில் உருவாகும் இப்படத்தை தயாரிக்கிறார் பிரகாஷ்ராஜ். இப்படத்தில் இன்று தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக விளங்கும் உதய்கிரண் கதாநாயகனாக நடிக்க அவருக்கு இணையாக விமலா நடிக்கவிருக்கிறார்.

வழக்கம்போல் காதல்கதை தான் என்றாலும் 'பொய்' காதலின் இன்னொரு கோணத்தை சொல்கிறது என்கின்றனர் படசம்பந்தப்பட்டவர்கள்.

தொகுப்பு: கேடிஸ்ரீ

© TamilOnline.com