வேளச்சேரி துப்பாக்கிச்சூடு


சரத்குமார் நாயகனாக நடிக்கும் படம் இது. நாயகி இனியா. புதுமுகங்கள் அர்வி, நீரஜா இளஞ்ஜோடிகளாக அறிமுகமாகின்றனர். இமான் அண்ணாச்சி, பிளாக் பாண்டி, நிழல்கள் ரவி உள்ளிட்டோர் உடன் நடிக்கின்றனர். எஸ்.டி. வேந்தன் இயக்குகிறார். படத்தில் சரத்குமாருக்கு என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் வேடம். "காவல்துறையினர் சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற நடவடிக்கை எடுத்தால் அதை மனித உரிமை மீறல் என்கிறார்கள். அதேசமயம் கிரிமினல்களால் பாதிக்கப்படும் காவல்துறையினருக்காக யாரும் கொடிபிடிப்பதில்லை. அப்பாவிகளைக் கொல்வது எங்கள் நோக்கமல்ல. ஆனால் எதிர்பாராதவிதமாக அப்பாவிகளும் கொல்லப்படலாம்' எனக் காவல்துறை பக்க நியாயத்தை சரத்குமார் பேசுகிறார். மனித உரிமை ஆர்வலராக வரும் இனியா பொதுமக்களுக்கான நியாயங்களைப் பேசுகிறார். "இரண்டு தரப்பு வாதங்களையும் சமமாகச் சொல்லியிருக்கிறோம்" என்கிறார் இயக்குனர். கிளைமாக்ஸ் என்கவுன்ட்டர் முடிந்ததும் நடைபெறும் மனித உரிமை ஆணையத்தின் விசாரணை இப்படத்தின் ஹைலைட்டாம்.

அரவிந்த்

© TamilOnline.com