ஸ்ரீ மகாபெரியவர் 125வது பிறந்தநாள் விழா
மே 28, 2018 அன்று ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ மகாபெரியவரின் 125வது ஜயந்தி ஆராதனை விழா நெவார்க் பெவிலியன், நெவார்க், கலிஃபோர்னியாவில் விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. இந்த விழாவை ஸ்ரீ காமாட்சி கம்யூனிட்டி சென்டர் சிறப்பாக ஏற்பாடு செய்து நடத்தியது.

காலையில் கணபதி பூஜை மற்றும் கலச ஸ்தாபனத்துடன் விழா ஆரம்பமானது. மதியம் 12 மணிமுதல் 1 மணிவரை புருஷசூக்த ஹோமம், பூர்ணாகுதி நடந்தன. 1 மணியளவில் ஏகவர ருத்திர அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம் செய்யப்பட்டது.

மதியம் 2:30 மணிக்கு மகாபெரியவர் பட ஊர்வலம் செண்டை மேளம் முழங்க, "ஹர ஹர சங்கர, ஜெய ஜெய சங்கர" கோஷத்துடன் நடைபெற்றது. கலை நிகழ்ச்சிகளுக்குப் பின்னர் விழா இனிதே முடிவடைந்தது.

மகாபெரியவர் ஜெயந்தி ஆராதனை மே 22 முதல் மே 27 வரை ரிக்வேத ஹோமத்துடன் சான்ட க்ளாரா ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவிலில் சிறப்பாக நடைபெற்றது.

ராஜேஸ்வரி ஜெயராமன்,
சான்ட க்ளாரா, கலிஃபோர்னியா

© TamilOnline.com