மைத்ரி: ஆண்டுவிழா
ஜூன் 10, 2018 அன்று மைத்ரி நாட்யாலயாவின் ஆண்டுவிழா சான்ட க்ளாரா மிஷன் சிடி சென்டரில் நடைபெற்றது. இந்த ஆண்டு விழாவின் தலைப்பு 'சம்யுக்தா'. பெயருக்குத் தகுந்தாற்போல் நிகழ்ச்சி பாட்டு, நடனம், இசை யாவும் ஒன்றிணைந்ததாக இருந்தது.

குரு, சிஷ்யர்கள் ஒன்றாக இணைந்து ஆடிய நடனம் குருவின் ஆற்றலையும், மாணவர்களின் திறமையையும் வெளிப்படுத்தியது. பரதநாட்டியம், குச்சுபுடி என்ற இரண்டு நடனக் கலைவடிவங்களை, பள்ளிப் பட்டதாரிகள் முதல் மழலையர் வரை ஒன்றாக இணைந்து சம்யுக்தாவின் வெற்றிக்கு வழிவகுத்தனர். கவுத்துவம், ஜதீஸ்வரம், புஷ்பாஞ்சலி, தில்லானா போன்றவை அரங்கேறின. குரு திருமதி சிர்ணிகாந்த் மாணவர்களுடன் இணைந்து வர்ணம் (பரதம்), தில்லானா (பரதம், குச்சுப்புடி) ஆடி சம்யுக்தா ஆண்டுவிழாவுக்கு மெருகேற்றினார்.

அனுபத்மநாபன்,
சன்னிவேல், கலிஃபோர்னியா

© TamilOnline.com