STF டாலஸ்: திருக்குறள் போட்டிகள்
ஜனவரி 27, 2018 அன்று ப்ளேனோவில் (4505 Hedgcoxe Road) உள்ள Kidz Camp Montessori வளாகத்தில் 11வது ஆண்டாகத் திருக்குறள் போட்டிகள் நடைபெற்றன. குழந்தைகளுக்கு ஒரு குறளுக்கு ஒரு டாலர் பரிசுத் தொகையுடன், சாஸ்தா தமிழ் அறக்கட்டளை சார்பில் நடைபெறும் இப்போட்டியில் பெரியவர்களுக்கான போட்டியும் இடம்பெற்றது.

பதினோராவது ஆண்டாக நடைபெற்ற இந்தப் போட்டியில், 143 பேர் பங்கேற்றனர். 7419 முறை குறட்பாக்கள் ஒப்புவிக்கப்பட்டன. மழலைகள் பிரிவில் அனிந்தித் ஸ்ரீனிவாசன் 93 குறள்கள் ஒப்புவித்தார். அக்ஷரா பிரபு மற்றும் அனுஷ்கா பிரபு என்ற இரண்டரை வயது இரட்டைச் சகோதரிகள் மிகக்குறைந்த வயதுப் பங்கேற்பாளர்கள் ஆவார்கள்.

இவ்வாண்டு திரு. செந்தில் துரைசாமி, அமெரிக்காவில் அனைத்துக் குறட்பாக்களையும் பொருளோடு கூறிய முதல் ஆண் என்கிற வகையில் 'குறளரசர்' மகுடத்தைக் கைப்பற்றினார்.

62 வயதான பெண்மணி ஒருவர் 156 குறள்கள் சொல்லி அசத்திவிட்டார். முப்பதுக்கும் மேற்பட்டவர்கள் 50 குறட்பாக்களுக்கும் மேல் ஒப்புவித்தார்கள்.

சின்னமணி,
டாலஸ், டெக்சஸ்

© TamilOnline.com