அரண்மனை லாடு
தேவையான பொருட்கள்:
கடலைப்பருப்பு - 2 கப்
தேங்காய் - 1/2 கப்
ஏலக்காய்ப் பொடி - 1 ஸ்பூன்
சர்க்கரை - 3 கப்
நெய் - 1 கப்
பச்சை கற்பூரம் - சிறிது

செய்முறை:
கடலைப் பருப்பை வெறும் வாணலியில் சிவக்க வறுத்து தண்ணீரில் ஊற வைக்கவும்.
நன்றாக ஊறியதும் தண்ணீரை வடியவிட்டு காயப் போட்டு மிக்சியில் நைசாக அரைத்துக் கொள்ளவும். தேங்காய் வறுத்துப் போட்டு ஏலக்காய்ப் பச்சைக் கற்பூரம் போடவும்.
சர்க்கரையை பொடியாக்கிப் போட்டு நெய்யை சுடவைத்து ஊற்றி உருண்டை பிடிக்கவும்.
வெல்லம் போட்டும் உருண்டை பிடிக்கலாம். சுவையாய் இருக்கும்.
இவையெல்லாம் தவிர வேர்க்கடலை, எள்ளு ஆகியவற்றிலும் உருண்டைகள் செய்யலாம்.

தங்கம் ராமசாமி

© TamilOnline.com