ஆனந்தநாராயண பாகவதர் நாமசங்கீர்த்தன யாத்திரை
கும்பகோணம் ஆனந்தநாராயண பாகவதரின் நாமசங்கீர்த்தன யாத்திரை அமெரிக்காவில் ஜூலை 22 அன்று செயின்ட்லூயிஸ் நகரில் தொடங்கி, செப்டம்பர் 4 அன்று சிகாகோவில் நிறைவுற்றது. 22 ஜூலை அன்று தி ஹிந்து டெம்பில் ஆஃப் செயிண்ட் லூயிஸ் கோவிலில் நடந்த முதல் நாமசங்கீர்த்தன நிகழ்ச்சிக்கு பார்வையாளர்களிடயே மிகப்பெரிய வரவேற்பு இருந்தது. தொடர்ந்து சான்ஹோஸே, சான்டா க்ளாரா, போர்லாண்ட், கான்கார்டு, நியூ ஜெர்சி, நியூயார்க், மேரிலாண்ட், வர்ஜீனியா, லாஸ் ஏஞ்சலஸ், டெக்சஸ், கலிஃபோர்னியா, நார்த் கரோலினா, சிகாகோ என அமெரிக்காவின் பல மாகாணங்களிலும் பக்தர்கள் திரளாகக் கலந்துகொண்டு கோலாகலத்துடன் நாம பஜனையில் ஈடுபட்டனர். ஒவ்வோர் இடத்திலும் அந்தந்தப் பகுதி வித்வான்களே பக்கவாத்தியம் வாசித்து நிகழ்ச்சிக்கு மெருகூட்டினர். செப்டம்பர் 3 அன்று சிகாகோ காயத்ரி கணேசா ஆலயத்தில் நடைபெற்ற நிறைவு நாம சங்கீர்த்தன நிகழ்ச்சி பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.

ஆனந்தநாராயண பாகவதரின் அமெரிக்க நாமசங்கீர்த்தன யாத்திரை மீண்டும் அக்டோபர் 20 அன்று துவங்கி நவம்பர் 25 வரை பல இடங்களிலும் நடக்க இருக்கிறது.

மேலும் விவரங்களுக்கு:
Samaa Arts LLC, 4810 S California Pl, Chandler, AZ 85248
தொலைபேசி: 443-355-7388; 91-9940227327; 044-28250709
மின்னஞ்சல்: anar51@yahoo.com

செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com