TNF, மிச்சிகன் தமிழ்ச்சங்கம் நிதிதிரட்டல் நடை
செப்டம்பர் 10, 2017 அன்று தமிழ்நாடு அறக்கட்டளையின் 'ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவிப்போம்' என்கிற திட்டத்திற்கு நிதி திரட்டுவதற்காக மிச்சிகன் தமிழ்ச்சங்கத்தின் துணையோடு 5 கி.மீ. நடை நிகழ்ச்சி நடந்தேறியது. நிகழ்ச்சியில் 4 வயதுக் குழந்தை முதல் 84 வயது முதியவர்வரை 300க்கும் அதிகமானோர் பங்கேற்றனர்.

அறக்கட்டளைத் தலைவர் சோமலெ சோமசுந்தரம் நிகழ்ச்சியில் பங்கேற்றார். வெற்றியாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியின் மூலமாக $3100 திரட்டப்பட்டது. தமிழ்ச்சங்கத் தலைவர் புகழேந்தி நன்றி தெரிவித்தார். TNF இன்டெர்ன்ஷிப் திட்டத்தின் கீழ் தமிழகம் சென்றுவந்த மிச்சிகன் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் விளக்கவுரை கொண்ட பலகைகள் ஏந்தித் தமிழக அனுபவத்தை எடுத்துச் சொன்னார்கள்.

அபிராமி சுவாமிநாதன்,
மிச்சிகன்

© TamilOnline.com