நாடோடி கனவு


மாஸ்டர் மகேந்திரன் நாயகனாகவும், சுப்ரஜா நாயகியாகவும் நடித்திருக்கும் படம் நாடோடி கனவு. முக்கிய வேடங்களில் ராஜேந்திரன், கிரேன் மனோகர், விஜய் கணேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சீர்காழி சிற்பி, அண்ணாமலை இருவரும் பாடல்களை எழுத, சபேஷ் - முரளி இசையமைத்துள்ளனர். எழுதி, இயக்கியிருக்கிறார் வீரசெல்வா. காதலர்களை ஊரைவிட்டு ஒதுக்கி வைக்க முடியாமல், தாமே ஊரைவிட்டு வெளியேறுகின்றனர் ஒரு ஊர் மக்கள். காரணம் என்ன, முடிவு என்ன என்பவற்றைச் சொல்கிறது 'நாடோடி கனவு'.

அரவிந்த்

© TamilOnline.com