களத்தூர் கிராமம்


கிஷோர் நாயகனாகவும், யன்கா ஷெட்டி நாயகியாகவும் நடித்திருக்கும் படம் 'களத்தூர் கிராமம்'. முக்கியப் பாத்திரங்களில் அஜய் ரத்னம், தீரஜ் ரத்னம், ரஜினி மகாதேவையா, சுலீல் குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பாடல்களை கண்மணி சுப்புவும் இளையராஜாவும் எழுதியுள்ளனர். சரண் கே. அத்வைதன் எழுதி, இயக்கியுள்ளார். இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். "இது ஒரு புறக்கணிக்கப்பட்ட கிராமத்தின் கதை. ஒரு கிராமத்தை காவல்துறை வஞ்சிக்கிறது. இதனால் அவமதிப்பையும், ஏமாற்றத்தையும் சந்திக்கும் கிராம மக்கள், போலீசை எதிர்க்கின்றனர். இறுதியில் வெல்வது மக்களா, காவல்துறையா என்பதுதான் கதை" என்கிறார் கோலிவுட் கோவிந்து.

அரவிந்த்

© TamilOnline.com