பிரம்மாண்ட நாயகன்
தெலுங்கில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் 'ஓம் நமோ வேங்கடேசாய'. இப்படம் தமிழில் 'பிரம்மாண்ட நாயகன்' என்ற பெயரில் வெளிவரவிருக்கிறது. நாகார்ஜுனா முக்கிய வேடத்தில் நடிக்க உடன் அனுஷ்கா, சௌரப் ஜெயின், பிரக்யா ஜெய்ஸ்வால், ஜெகபதிபாபு, சாய் குமார், சம்பத், பிரம்மானந்தம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கே. ராகவேந்திரராவ் இயக்கியிருக்கும் இப்படத்திற்கு இசை கீரவாணி. "பெருமாளின் உண்மைப் பக்தன் ஒருவனின் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவம்தான் படத்தின் கதை. பகவானுக்கும் பக்தனுக்கும் உள்ள உறவு, திருமலை உருவான விதம், ஆனந்த நிலையம் எனப் பெயர்வரக் காரணம், வேங்கடம் என்ற சொல்லுக்குப் பொருள்விளக்கம், பாலாஜி என்று பெயர்வரக் காரணம், திருமலையில் முதலில் யாரை வணங்குவது என்பது உட்பட பக்தர்கள் பலரது மனதில் தோன்றும் சந்தேகங்களுக்கு இப்படத்தில் விளக்கம் உள்ளது" என்கிறார் கோலிவுட் கோவிந்து. சரியான தலைப்புதான்.



அரவிந்த்

© TamilOnline.com