மூன்று வேடங்களில் பரத்
சமீபத்தில் திரைக்கு வந்த 'கூடல்நகர்' படத்தில் பரத் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். இதைத் தொடர்ந்து தற்போது 'நேபாளி' என்ற படத்தில் மனநோயாளி, ப்ளேபாய், நல்லவன் என்று மூன்று விதமான பாத்திரங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் பரத்.

'காதல் சடுகுடு', 'தொட்டி ஜெயா' போன்ற படங்களை இயக்கிய வி.இசட். துரை 'நேபாளி'யை இயக்கவிருக்கிறார். கதை. திரைக்கதை, வசனம் ஆகியவற்றையும் அவரே கவனிக்கிறார்.

ஓ.எஸ்.டி.பிலிம்ஸ் சார்பில் ஆர். சரவணன் தயாரிக்கும் இப்படத்திற்கான இசையை ஸ்ரீகாந்த்தேவா அமைக்கவிருக்கிறார். பிரபல எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் வசனம் எழுதுகிறார்.

தியேட்டர்களில் உள்ள வெண்திரையில் ஒரே சமயத்தில் மூன்று படங்கள் ஓடுகிற புதிய தொழில்நுட்பம் இந்தப் படத்தில் கையாளப் படுவது இதன் சிறப்பம்சம்.

கேடிஸ்ரீ

© TamilOnline.com