நான் யாரென்று நீ சொல்


கீர்த்திதரன் நாயகனாக அறிமுகமாகும் படம் இது. நாயகியாக சுரேகா அறிமுகமாகிறார். நாகேஷின் பேரனும் ஆனந்த்பாபுவின் மகனுமான கஜேஷ் வில்லனாக வருகிறார். ஆனந்த்பாபு, பாண்டு, கராத்தேராஜா, மாறன், சோனா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். பாடல்களை இளைய கம்பன் எழுத, இசையமைக்கிறார் ஜான் பீட்டர். ஏ.எம். பாஸ்கர் எழுதி, இயக்குகிறார். சோனாவின் மகள் சுதா ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்கிறாள். உடன் வேலைசெய்யும் கஜேஷ் மற்றும் பேக்கரி தொழில்செய்யும் கீர்த்திதரன் இருவரும் அவளைக் காதலிக்க முயற்சிக்கின்றனர். அதைக் கண்டிக்கிறார் சோனா. தட்டிக் கேட்ட இரண்டு நாட்களில் அவர் கொலை செய்யப்படுகிறார். கொலை செய்தது யார் என்பதுதான் படத்தின் கதையாம்.

அரவிந்த்

© TamilOnline.com