அரவாணிகள் குறித்த கருவறைப் பூக்கள்
முதன்முதலாக அரவாணிகளின் வாழ்க்கை முறை, உளவியல், உடலியல் ரீதியான பிரச்னை களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் ‘கருவறைப் பூக்கள்’ என்ற பெயரில் தமிழ்த் திரைப் படம் ஒன்று தயாரிக்கப்பட வுள்ளது.

லிவிங் ஸ்மைல் என்ற அரவாணி ஒருவரே நாயகியாக நடிக்கவிருக்கிறார். இவர் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. பட்டம் பெற்றவர். தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார்.

லூர்சேவியர் என்பவர் இப்படத் திற்கான கதை, திரைக்கதை, வசனம் மற்றும் இயக்கத்தை கவனிக்கிறார். அரவாணிகளும் மனிதர்கள்தாம், அவர்களாலும் சமுதாயத்தில் சாதனைகள் பல படைக்க முடியும் என்பதே இப்படத்தின் மையக்கரு.

கேடிஸ்ரீ

© TamilOnline.com