ரகுராமம்: மைத்ரி நாட்யாலயா ஆண்டுவிழா
ஜூன் 10, 2017 அன்று, 'ரகுராமம்' மைத்ரி நாட்யாலயா நடனப் பள்ளியின் ஆண்டுவிழா மிஷன் சிடி நிகழ்கலை மையத்தில் நடந்தேறியது. மாணவர்களின் நடனமும், முகபாவமும் அவர்களது ஆசிரியை ஷிர்ணிகாந்த் அவர்களின் அர்ப்பணிப்பும் நிகழ்ச்சிகளில் சிறப்பாக வெளிப்பட்டன. குச்சுபுடி வித்தகர் அமரர் வேம்பட்டி சின்னசத்யம் வடிவமைத்த 'தசாவதாரம்' மற்றும் குரு ஷிர்ணிகாந்த் வடிவமைத்த 'ராமாயணம்' ஆகியவை நிகழ்ச்சியின் சிறப்பம்சங்களாக அமைந்தன. ஸ்ரீ தியாகராஜர், அன்னமாச்சார்யா, மைசூர் வாசுதேவாச்சார், மகாராஜா சுவாதித் திருநாள் ஆகியோரின் பிரபலமான கீர்த்தனைகளும் இடம்பெற்றன.

எழுதுபதுக்கும் மேற்பட்ட மாணவியர் பங்கேற்ற இந்நிகழ்ச்சிக்கு, திருமதி ஷிர்ணிகாந்த் (நட்டுவாங்கம்), திருமதி அனிதா தீக்‌ஷித், செல்வி மாளவிகா ஸ்ரீராம், செல்வி பூஜிதா தாசிகா (வாய்ப்பாட்டு), திரு. ரேயாஸ் பரத்வாஜ் (புல்லாங்குழல்), திரு. ரகுநந்தன் நல்லன் (மிருதங்கம்) ஆகியோர் உறுதுணையாக அமைந்தனர்.

அனு பத்மநாபன்,
சன்னிவேல், கலிஃபோர்னியா

© TamilOnline.com