எழுதாக் காவியம்
வெகு ஆசையாய்
நான் எழுத நினைத்த
பக்கங்களை
அவசரமாகக்
கிழித்து எறிந்தாய்...

எஞ்சி இருக்கும்
பக்கங்களிலாவது
எப்படியாவது
எழுதிவிடலாம்
என்று என்னைத்
தேற்றிக் கொண்டேன்...

இப்போது என்
பேனா முனையையும்
உடைத்திருக்கிறாய்...

மிகக் குறைந்த பக்கங்களுடன்
முனை உடைந்த பேனாவுடன்
எழுதி முடிக்க வேண்டிய
பெருங்காவியம்
எனக்குள் காத்திருக்கிறது....

அருணா சுப்ரமணியன்,
அட்லாண்டா, ஜார்ஜியா

© TamilOnline.com