நகல்


ஒரே ஒரு கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு உருவாகி வரும் படம் நகல். இயக்குநர் சசி, இயக்குநர் சுசீந்திரன் ஆகியோரிடம் இணை இயக்குநராகப் பணியாற்றிய சுரேஷ் எஸ். குமார் இப்படத்தை இயக்குகிறார். ஏற்கனவே டப்ஸ்மாஷ் மூலம் ரசிகர்களிடையே புகழ்பெற்ற மிருணாளினி இப்படத்தில் நாயகியாக நடிக்கிறார். ஆண்டனி ஜார்ஜ் இசையமைக்கிறார். "ஒரு பெண்ணின் அமானுஷ்ய அனுபவங்களை மையமாகக் கொண்டுதான் எங்களின் 'நகல்' படத்தின் கதை நகரும். ஒரே ஒரு கதாபாத்திரம் மட்டும் இருப்பதால், கதையை எழுதுவது சற்றுச் சவாலாகவே இருந்தது. தனித்துவமான முயற்சியில் முழுக்க முழுக்க திகில் அனுபவத்தைக் கொடுக்கும் திரைப்படமாக இருந்தாலும், ரசிகர்களை உற்சாகப்படுத்த கூடிய எல்லா சிறப்பம்சங்களும் கதையில் உள்ளன" என்கிறார் இயக்குநர். அசல்?

அரவிந்த்

© TamilOnline.com