மீண்டும் வா அருகில் வா


ஒரு மனநல மருத்துவர் மனிதசக்திக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தியைப் பெற முயற்சிக்கிறார். அதே சமயத்தில் திடீர் திடீரென இளம்பெண்கள் காணாமல் போகிறார்கள். இரண்டுக்கும் என்ன தொடர்பு என்பதைத் திகில் கலந்து சொல்கிறது இப்படம். சந்தோஷ் பிரதாப், ஆரவ் நாயகர்களாக நடிக்க, சாரா தேவா நாயகியாக அறிமுகமாகிறார். இரட்டை இசையமைப்பாளர்கள் விவேக்-ஜேஷ்வந்த் இசையமைக்க, எழுதி இயக்குகிறார் ஜெய ராஜேந்திர சோழன். "இது ஒரு வித்தியாசமான முயற்சி. படத்தின் சஸ்பென்சை கிளைமாக்ஸிற்கு முன்பே சொல்லிவிடுவோம். அதன் பிறகுதான் கிளைமாக்ஸ் வரும். முடியும்போது அது வேறுவிதமாக இருக்கும்" என்கிறார் இயக்குநர். வித்தியாசமாத்தான் இருக்கு!

அரவிந்த்

© TamilOnline.com