திரைக்கு வராத கதை
கதாநாயகனே இல்லாமல், முழுக்க முழுக்கப் பெண்களே நடிக்கும் படம் இது. பல வெற்றிப் படங்களை இயக்கிய மலையாள இயக்குநர் துளசிதாஸ் இயக்கும் முதல் தமிழ்ப்படம். நதியா, இனியா, கோவை சரளா, ஆர்த்தி, சபீதா ஆனந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இசை, M.G. குமார். வசனத்தை துரைப்பாண்டியன் எழுதியிருக்கிறார். "திரைப்படக் கல்லூரி மாணவிகள் சிலர் சொந்தப் படம் எடுக்கின்றனர். அவர்கள் எடுக்கும் கதையின் போக்கில் ஏற்படும் சம்பவங்கள், நிஜமாகவே உண்மைச் சம்பவங்களாக மாறுகின்றன. எப்படி என்பதுதான் படத்தின் கதை" என்கிறார் கோலிவுட் கோவிந்து. படம் திரைக்கு வந்துட்டா நல்லதுதான்.



அரவிந்த்

© TamilOnline.com