ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்


அதர்வா நாயகனாக நடிக்க, ஆனந்தி, ஐஸ்வர்யா ராஜேஷ், ரெஜினா, ப்ரணீதா ஆகியோர் நாயகிகளாக நடிக்கின்றனர் இப்படத்தில். சூரி, ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், மயில்சாமி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். பாடல்களை யுகபாரதி எழுத, டி. இமான் இசையமைக்கிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் ஜெ. இளவரசு. “பெண்ணின் முதல் காதல் அவள் வாழ்க்கையில் எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை அழுத்தமாகவும், உணர்வுபூர்வமாகவும், நகைச்சுவையாகவும் பதிவு செய்திருக்கிறோம்.” என்கிறார் இயக்குநர்.

அரவிந்த்

© TamilOnline.com