கன்னா பின்னா


திருமணம் செய்தால் அழகான பெண்ணைத்தான் திருமணம் செய்துகொள்ள வேண்டும்; அப்படிப்பட்ட பெண்கள் சென்னையில்தான் இருப்பார்கள் என நம்பி திருச்சியிலிருந்து சென்னைக்கு வருகிறார் நாயகன். அவருக்கு என்ன நடக்கிறது என்பதைச் சொல்கிறது 'கன்னா பின்னா'. எழுதி, இயக்குவதோடு நாயகனாகவும் நடித்திருக்கிறார் தியா. நாயகி அஞ்சலி ராவ். ரோஷன் சேதுராமன் இசையமைத்திருக்கிறார். படம்பற்றி இயக்குநர், "ஆரம்பம் முதல் முடிவுவரை நகைச்சுவைக் கொண்டாட்டமாக இந்தப் படத்தை எடுத்திருக்கிறோம். நிஜ சம்பவங்களைக் கற்பனை கலந்து கொடுத்து உள்ளோம். சிரிப்புக்கு நாங்கள் உத்திரவாதம்" என்கிறார்.

அரவிந்த்

© TamilOnline.com