இருவரின் புரிதலில்
மனிதப் பிறவியின்
பயனிதுவென
இப்போதுதான் புரிந்தது....
அவளது
புன்னகையில்
அங்கீகாரங்கள்.

கற்றது கைப்பிடி
அளவுதானென்று
இப்போதுதான் புரிந்தது
அவளது அன்பின்
அரவணைப்பில்.

எதிர்காலம்
வினாக்குறி ஆனபோது
புதிரல்ல,
'நம் வாழ்க்கை' என்று
அவள் திட்டமிட
தடம்பதித்தன
நிகழ்காலங்கள்.

எல்லா வளமும்
நலனும்
இருவரின் புரிதலில்
ஒவ்வொரு நாளும்
மறுபிறப்பெடுக்கின்றன.

கா.ந. கல்யாணசுந்தரம்,
சென்னை

© TamilOnline.com