ஆர்.பி. செளத்ரி படத்தில் நயன்தாரா
ஆர்.பி. செளத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் 'ஈ' என்ற பெயரில் புதிய படமொன்றைத் தயாரிக்கிறது. நாயகன் ஜீவா, நாயகி நயன்தாரா. 'இயற்கை' பட இயக்குனர் ஜனநாதன் இப்படத்தின் கதை, வசனம் மற்றும் இயக்கத்திற்குப் பொறுப்பேற்றுள்ளார். இசையமைப்பாளர் தேவாவின் மகன் ஸ்ரீகாந்த் தேவா படத்திற்கு இசையமைக்கிறார்.

செப்டம்பர் மாதம் இப்படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கும்.

தொகுப்பு:கேடிஸ்ரீ

© TamilOnline.com