வைரவிழா காணும் ஏ.வி.எம்.
பிரபல ஏ.வி.எம். திரைப்பட நிறுவனம் தொடங்கி அறுபது ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் தனது 167-ஆவது படத்திற்கு அஜீத்குமாரை நாயகனாகத் தேர்வு செய்திருக்கிறது.

'திருப்பதி' என்கிற பெயரில் உருவாகவிருக்கும் இப்படத்தை எம். சரவணன், எம்.எஸ். குகன் ஆகிய இருவரும் தயாரிக்கிறார்கள்.

படத்தின் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் மற்றும் இயக்கத்தைக் கவனிக்கிறார் பேரரசு. பரத்வாஜின் இசையில், இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற டிசம்பர் மாதம் தொடங்கவிருக்கிறது. DTS ஒலிப்பதிவுடன் உருவாகும் இப்படத்திற்கான நாயகி மற்றும் பிற நடிகர்கள் இன்னும் முடிவாகவில்லை.

தொகுப்பு:கேடிஸ்ரீ

© TamilOnline.com