மற்றொருவன்


வித்தியாசமான படங்கள் அவ்வப்போது வருவது வழக்கம்தான். ஒரே ஒருவர் மட்டுமே நடித்திருக்கும் படம் மற்றொருவன். ஒரே ஒரு பாத்திரம் மட்டுமே நமக்கு திரையில் தெரியும். அந்தப் பாத்திரத்தில் நடித்திருக்கிறார் ரியாஸ்கான். அறிமுக இயக்குநர் மஜோ மேத்யூ இப்படத்தை இயக்கியுள்ளார். "இது உளவியல் சார்ந்த கதை. ஆனாலும் எல்லாருக்கும் புரிகிற மாதிரியான கமர்ஷியல் படம்தான். நாயகன் கனவில் காண்பது ஒவ்வொன்றும் நிஜத்தில் நடக்கிறது. ஒரு பெரிய கனவு காண்கிறான். அது நிஜமாகிறதா என்பதுதான் க்ளைமாக்ஸ். நாயகனின் எதிரியைப் பார்க்க முடியாது. நிழலாகவே அறிய முடிகிறது. அவன் யார் என்பது சஸ்பென்ஸ்" என்கிறார் இயக்குனர். பாடல்களை கல்பாக்கம் சுகுமார் எழுத, பென்னிஜான் இசையமைத்துள்ளார். வசனம்: வேல் முருகன். தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழிகளிலும் இப்படம் நேரடியாக உருவாகியுள்ளது. அவன்தான் அந்த மற்றொருவனோ?

அரவிந்த்

© TamilOnline.com